முத்தமிழ் வித்தகர் என்றும்-மூத்த
தமிழ் மகன் என்றும் -முடி
சூடும் கலைஞர் பெருமானே-தாங்கள்
இன்று முதல் கொலைஞர் பெருமான் ஆகுக!
பாதிக் காலம் பதவியில் இருந்து விட்டும்
மீதிக் காலமும் பல்லக்கில் பவனி வரும் கனவானே
சேற்றுக்குள் புழுவாய் செந்தமிழன் சீரழிதல்
கண்டும் சினம் கொள்ளா தன்மான சிங்கமே!
மனைவி துணைவி என்ற வாழ்வுண்டு - மக்கள்
மூவர்க்கு மகத்தான பதவியுண்டு - சுற்றம்
சூழலுக்கும் பேரக்கொளுந்துகளுக்கும் - சொந்தமாய்
டி.வீயுண்டு - உடன் பிறப்புகளுக்கு மட்டும் ?
உடுத்த உடையுமில்லை உண்ண உணவுமில்லை
பிஞ்சு மழலைகளுக்கு கஞ்சிக்கும் வசதியில்லை
இல்லை என்பதே நிறைந்து கிடக்குது - தமிழன்
உயிர்கள் மட்டுமே மலிந்து கிடக்குது.
குளிரை போர்த்தி உறங்குகிறார் - எம்மினம்
கழி நீர் போல வாழ்கின்றார் - உயிரை
கூட கொடுக்கிறோம் - மு.க
எங்கள் உணர்வை மட்டும் கொள்ளாதே!
மானாட மயிலாட மகிழ்ச்சி தான் - குறைப்
பாவடையில் தாயினம் தேய்மானம்
ஆவதும் குளிர்ச்சி தான்- பண்பட்ட தமிழுக்கு
உங்களின் பங்கு ஓங்குக! - ஓரிரு
நொடியேனும் எங்களின் அலறலை - உலகுக்கு
சொல்லுமையா ! - பாதக் கமலதிட்கு
செருப்பை இருக்கிறோம் - நெருப்பாய்
இருக்க வேண்டியவரே - ஏன்
இப்படி செருப்பாய் இருக்கிறீர்?
தமிழச்சி மார்பில் தான் மழலை
பசி தீர்தீரோ? பிறகேன் பன்றி
கூட்டத்திடம் - பல்
இழித்து நிற்கிறீர்?
இளைப்பாறும் போதிலேனும் தமிழனுக்கு
எள்ளளவேனும் ஏதும் செய்குக!
உளியின் ஓசை வடித்தவரே - எங்கள்
வலியின் ஓசை மட்டும் கேட்கலையோ?
வீழ்வது மு க வகா இருப்பினும் எழுவது
தமிழினமாய் இருக்கட்டும்.- வெல்க தமிழ்!
நன்றி: Logan Tharan naamtamilar.org
பகுப்புகள் அரசியல்வாதிகள், இன அழிவு, கவிதை, சிந்தனைகள், தமிழ்நாடு, வேதனைகள்
+copier.jpg)





இலவசமாய் வந்த,
உதிரி பாகங்களை
ஒட்ட வைத்து செய்த
சுதேசி தயாரிப்பு தான்,
என்றாலும் ....
"இதனை இயக்கும்
ரிமோட் மட்டும்
இத்தாலிய இறக்குமதி."