image

முத்தமிழ் வித்தகர் என்றும்-மூத்த

தமிழ் மகன் என்றும் -முடி

சூடும் கலைஞர் பெருமானே-தாங்கள்

இன்று முதல் கொலைஞர் பெருமான் ஆகுக!

பாதிக் காலம் பதவியில் இருந்து விட்டும்

மீதிக் காலமும் பல்லக்கில் பவனி வரும் கனவானே

சேற்றுக்குள் புழுவாய் செந்தமிழன் சீரழிதல்

கண்டும் சினம் கொள்ளா தன்மான சிங்கமே!

மனைவி துணைவி என்ற வாழ்வுண்டு - மக்கள்

மூவர்க்கு மகத்தான பதவியுண்டு - சுற்றம்

சூழலுக்கும் பேரக்கொளுந்துகளுக்கும் - சொந்தமாய்

டி.வீயுண்டு - உடன் பிறப்புகளுக்கு மட்டும் ?

உடுத்த உடையுமில்லை உண்ண உணவுமில்லை

பிஞ்சு மழலைகளுக்கு கஞ்சிக்கும் வசதியில்லை

இல்லை என்பதே நிறைந்து கிடக்குது - தமிழன்

உயிர்கள் மட்டுமே மலிந்து கிடக்குது.

குளிரை போர்த்தி உறங்குகிறார் - எம்மினம்

கழி நீர் போல வாழ்கின்றார் - உயிரை

கூட கொடுக்கிறோம் - மு.க

எங்கள் உணர்வை மட்டும் கொள்ளாதே!

மானாட மயிலாட மகிழ்ச்சி தான் - குறைப்

பாவடையில் தாயினம் தேய்மானம்

ஆவதும் குளிர்ச்சி தான்- பண்பட்ட தமிழுக்கு

உங்களின் பங்கு ஓங்குக! - ஓரிரு

நொடியேனும் எங்களின் அலறலை - உலகுக்கு

சொல்லுமையா !  - பாதக் கமலதிட்கு

செருப்பை இருக்கிறோம் - நெருப்பாய்

இருக்க வேண்டியவரே - ஏன்

இப்படி செருப்பாய் இருக்கிறீர்?

தமிழச்சி மார்பில் தான் மழலை

பசி தீர்தீரோ? பிறகேன் பன்றி

கூட்டத்திடம் - பல்

இழித்து நிற்கிறீர்?

இளைப்பாறும் போதிலேனும் தமிழனுக்கு

எள்ளளவேனும் ஏதும் செய்குக!

உளியின் ஓசை வடித்தவரே - எங்கள்

வலியின் ஓசை மட்டும் கேட்கலையோ?

வீழ்வது மு க வகா இருப்பினும்  எழுவது

தமிழினமாய் இருக்கட்டும்.- வெல்க தமிழ்!

நன்றி: Logan Tharan naamtamilar.org

2 Comments:

  1. ஜெரி ஈசானந்தா. said...
    இந்த நாற்காலி
    இலவசமாய் வந்த,
    உதிரி பாகங்களை
    ஒட்ட வைத்து செய்த
    சுதேசி தயாரிப்பு தான்,
    என்றாலும் ....
    "இதனை இயக்கும்
    ரிமோட் மட்டும்
    இத்தாலிய இறக்குமதி."
    மு.இரா said...
    அருமை நன்கு சொன்னீர்கள் ஜெரி அவர்களே... நன்றி.

Post a Comment